
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 53 கொவிட்-19 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 524 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 17 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 10 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 9 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், திருகோணமலை மற்றும் காலி மாவட்டங்களில் தலா 7 பேரும், வவுனியா, கேகாலை, புத்தளம் மாவட்டங்களில் தலா 3 பேரும், கிளிநொச்சியில் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது