கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தினால் கொடூரமாக தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபரொருவர் மொரயாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த இடமொன்றில் நபர் ஒருவர் தாக்கிப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு மொரயாய வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.