முன்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 20 பிஞ்சுகள்

முன்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 20 பிஞ்சுகள்

மதவாச்சியா பகுதியில் உள்ள ஒரு முன்பள்ளியின் 20 குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அனுராதபுர பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தேஜனா சோமதிலகா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட முன்பள்ளியின் ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.

ஆசிரியரின் தாய்க்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.