பொகவந்தலாவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட்

பொகவந்தலாவயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட்

பொகவந்தலாவ - கிவ் தோட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜெய்கணேஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளில் குறித்த 8 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குடும்பத்தில், முன்னதாக தந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுயாகி இருந்தது.

இந்தநிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் எட்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது