யானை தாக்கி இராணுவ வீரர் பலி!
பனாகொட இராணுவ முகாமில் யானைத் தாக்கி படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
முகாமில் உள்ள யானை ஒன்றை நீராடுவதற்காக அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீராடுவதற்காக சென்றிருந்த யானை, படைவீரரைத் தாக்கியுள்ளது. மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான படைவீரர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
யானைத் தாக்குதலுக்கு இலக்கான படைவீரர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026