
அதிகரிக்கும் கொரோனா தொற்று - இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய உடனடி உதவி
இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.இவ்வாறு பரவும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக கொவிட் தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த ஜப்பான் அரசு இன்று (மே 1) சுகாதார அமைச்சகத்திற்கு ரூ .5 மில்லியனுக்கும் அதிகமான குளிர் பெட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது..
இலங்கையில் உள்ள ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர்நிதியத்தின் (யுனிசெப்) ஒருங்கிணைப்புடன் கொழும்பில் உள்ள யுனிசெப் தலைமையகத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் இந்த குளிர் பெட்டிகளை கையளித்தார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 750 குளிர் சங்கிலி உதவி சாதனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி குளிர்பெட்டிகள் தடுப்பூசி நோக்கங்களுக்காக மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து களத்திற்கு குறிப்பிட்ட வெப்பநிலையில் தடுப்பூசியை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்.