
பாதுகாப்பு மதிலுடன் மோதுண்டு குடைசாய்ந்த கனரகவாகனம்!
காலி - கொழும்பு பிரதான வீதியில் அம்பலான்கொடை 84ஆம் கட்டை பகுதியில் கனரகவாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனரகவாகனத்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கு காரணம் என காவல்துறை தெரிவிக்கின்றது.
இதனால் கனரகவாகனம் வீதியோரம் இருந்த பாதுகாப்பு மதிலுடன் மோதுண்டு குடைசாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எந்தவொரு நபரும் காயமடையவில்லை என காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.