நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களுக்கு  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கைமய, கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட பகுதிகளுக்கு செம்மஞசன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அவ்வறே இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகங்க பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.