கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கொவிட் சிறைக்கைதி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கொவிட் சிறைக்கைதி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் தமக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து அவர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இன்று காலை குறித்த சிறைக் கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரைக் தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி காவல்துறையினரும், பாதுகாப்புத் தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று காலி, பூஸா சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான கைதியொருவர் மாத்தறை, வல்கம பகுதியில் வைத்து  சிறைச்சாலை பேருந்திலிருந்து தப்பிச்சென்றார்.

அவ்வாறே, கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொவிட் தொற்றுடைய அம்பாறையைச் சேர்ந்த நபர் ஒருவரும் நேற்று மாலை இவ்வாறு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தப்பிச்சென்ற நபர்களைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.