
மீன்பிடி, கடற்படை மற்றும் கடலோர பகுதிவாழ் மக்களுக்கு அறிவிப்பு
பேருவளையிலிருந்து பொத்துவில் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக கடற்கரையிலிருந்து கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 மற்றும் 55 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் புத்தளம் முதல் மாத்தறை வரை கொழும்பு மற்றும் காலி வழியாக கடலோரப் பகுதியில் கடல் அலைகள் 2.5 மற்றும் 3 மீட்டர் வரை உயரக்கூடும்.
இதன் காரணமாக மீன்பிடி, கடற்படை சமூகம் மற்றும் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.