
பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிலும் நாளை முதல் கொவிட் தடுப்பூசி
தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் நாளைய தினம் செலுத்தப்படவுள்ளன.
பதுளை மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் உப செயலாளர் சுப்பிரமணியம் சுதர்சன் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, தியத்தலாவை - பாலகதுருகம, பண்டாரவளை - எத்தளபிட்டிய, எல்ல - கித்தல் எல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 160 பேருக்கும் நாளைய தினம் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை முதல் பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.