குவைட் அரசாங்கத்தின் புதிய சட்டத்தால் பேராபத்தில் சிக்கப்போகும் 30 லட்சம் வெளிநாட்டவர்கள்

குவைட் அரசாங்கத்தின் புதிய சட்டத்தால் பேராபத்தில் சிக்கப்போகும் 30 லட்சம் வெளிநாட்டவர்கள்

குவைட் அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் அங்குள்ள 30 லட்சம் வெளிநாட்டினருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

குவைத்தின் மக்கள் தொகை 43 லட்சம். இதில் 13 லட்சம் தான் குவைத் குடிமகன்கள். 30 லட்சம் பேர் வெளிநாட்டவர். இதில் 70 சதவீதம் பேர் பல நாடுகளில் இருந்து வந்து பலதுறைகளில் வேலை பார்த்து செட்டில் ஆனவர்கள்.

வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் நெரிசல்மிக்க பகுதிகள் மூலமாக கொரோனாவும் வேகமாக பரவியது.

இதனால் குவைட் நாட்டவரின் கோபம் வெளிநாட்டவர் பக்கம் திரும்பியது.

வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்தால் தான் குவைட்காரரர்களுக்கு வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கும் என்ற கருத்துக்கள் எழுந்தன.

இதையடுத்து வெளிநாட்டவர் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்போவதாக, பிரதமர் ஷேக் சாபா அல் காலித் அல் சாபா அறிவித்தார்.

வெளிநாட்டவர் குடியேற்றத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் வரைவு மசோதா தயாரிக்கப் பட்டது. அதற்கு குவைத் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தாண்டு 70ல் இருந்து 65 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு இன்னொரு 5 சதவீதம் என படிப்படியாக வெளிநாட்டவர் எண்ணிக்கை 30 சதவீதமாக குறைக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, வீட்டு வேலை செய்யும் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பிலிப்பைன்சை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.