
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சிக்கிய பத்துப்பேர்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் கடற்படை நீரியல் வளத்துறை, அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய படகுகள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் அண்மைக்காலமாக கடற் கரையோரங்களில் பிற மாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து வழிச்சல் வலை மற்றும் அட்டை தொழிலிற்கு அனுமதி பெற்று டைனமற், சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் நீரியல் வளத்துறை மீன்பிடி பரிசோதகர்கள் கடற்படை மற்றும் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகள் மற்றும் 10 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீரியல்வளத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.