சங்குப்பிட்டியில் கோர விபத்து -மூவர் படுகாயம்

சங்குப்பிட்டியில் கோர விபத்து -மூவர் படுகாயம்

கிளிநொச்சி, சங்குப்பிட்டியில் டிப்பர் மோதியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சங்குப்பிட்டி பால இறக்கத்தில் நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த 25 வயது நபர் ஒருவரும், கிளிநொச்சி உதயநகரை சேர்ந்த 24 வயது நபர் ஒருவரும், ஆனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது நபர் ஒருவருமே படு காயமடைந்தவர்களாவர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சங்குப்பிட்டி வீதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் டிப்பருடன் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது