தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,356 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,356 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,356 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்றைய தினமே நாளொன்றில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 33,949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றைய தினம் 2,795 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் அநாவசியமாக பயணித்த 56 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினமும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.