
யாழில் சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்கள் நிர்கதி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 4 சிறு தொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.