
நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்கள்
நாட்டில் நேற்று 2,334 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் 2,275 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 59 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 228,256 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 33,518 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை,நேற்று (15) கொவிட்- 19 தொற்றிலிருந்து மேலும் 2,14 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 192,478 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.