பயணக் கட்டுப்பாட்டை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து

பயணக் கட்டுப்பாட்டை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி ஏறாவூர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஓட்டுனர், உதவியாளர் மற்றும் அதில் பயணித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (29) காலை கம்பஹா மிரிஸ்வத்த பகுதியில் வைத்து குறித்த பேருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பேருந்து பயணக் கட்டுப்பாட்டை மீறி பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பேருந்தில் பயணித்த அனைவரையும் கம்பஹா பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.