நிலப்பரப்பு ஒன்றில் மனித எச்சங்கள் சில மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு -சுகந்திபுரம் பிரதேச நிலப்பரப்பு ஒன்றில் மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு நீதவான் எல் லெனின்குமார் இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார்.
கடந்த 05 ஆம் திகதி விவசாயம் மேற்கொள்ள முற்பட்ட போது இவ்வாறு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.