தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின் அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின் அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

தொடருந்து இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்டுவந்த அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

எண்மான அடிப்படையிலான பயணச்சீட்டு வழங்கலில் ஏற்பட்டுள்ள மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து திணைக்கள தொழிற்சங்கங்கள், போக்குவரத்து அமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த போராட்டம் கைவிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் காரணமாக மக்கள் முகங்கொடுக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.