எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டயீட்டை பெறும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம்!

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டயீட்டை பெறும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம்!

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் நட்டயீடு பெறும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை தெரிவித்துளளார்.

இந்த கப்பலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்கான நட்டயீட்டை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிலும் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான எக்ஸ்-ப்ரஸ் பேர்ள் கப்பலினால் மேற்கு கடல்வளம் பாதிக்கப்பட்டதுடன் மீனவர்களும் இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.