
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து - பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!
மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் நாளை (17) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த புதன் கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தம் விதமாக இந்த சேவைகளை மீண்டும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.