360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவையான 360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் 120,000 லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இருப்பினும் தந்போது தொற்றாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு ஒட்சிசனை கொள்வனவு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.