கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 24,296 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா - புதிதாக 24,296 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 173 பேர் உயிரிழந்து உள்ளனர்.

 

 

 

கேரளா மாநிலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 24,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்  அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 38,51,984  ஆக அதிகரித்துள்ளது

 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,59,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 19,349 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 36,72,357 ஆக அதிகரித்துள்ளது.

 

 

ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 19,757 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,34,706 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 18.04 சதவீதமாக உள்ளது என தெரிவித்துள்ளது.