30 வயதிற்குட்பட்டவர்களுக்கு டோக்கியோவில் கொரோனா வைரஸ் தொற்று

30 வயதிற்குட்பட்டவர்களுக்கு டோக்கியோவில் கொரோனா வைரஸ் தொற்று

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சனிக்கிழமையன்று 206 புதிய தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

200 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகளின் நான்காவது நாள் அதிகரிப்பு இது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அங்கு அவசரகால நிலையினை அரசாங்கம் நீக்கிய பின்னர் நகரம் மீண்டும் எழுச்சி பெற போராடுகிறது.

இந்நிலையில் அங்கு இதுவரை 7,721 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 325 உயிரிழப்புக்களை இதுவரை பதிவாகியுள்ளன.

டோக்கியோவில் சுமார் 80% புதிய தொற்றுநோயாளிகள் 30 வயதிற்குட்பட்டவவர்கள் என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு 48 புதிய நோயாளிகள் இரவு விடுதிகளில் கலந்துகொண்டவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒகினாவாவில், 61 அமெரிக்க கடற்படையினர் இந்த வாரம் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர் – இருப்பினும் அந்த எண்ணிக்கை ஜப்பானின் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.