விரைவில் 40 இலட்சம் பைஸர் தடுப்பூசி டோஸ்கள்

விரைவில் 40 இலட்சம் பைஸர் தடுப்பூசி டோஸ்கள்

40 இலட்சம் ´பைஸர்´ தடுப்பூசி கூடிய விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் பாடசாலையை மீளத் திறப்பதற்கு பல கட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேலும் 73,710 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.