ஸ்ரீலங்காவில் கொரோனாவால் ஏற்பட்டநிலை -நான்கு இலட்சம் பேருக்கு பறிபோனது வேலை

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் ஏற்பட்டநிலை -நான்கு இலட்சம் பேருக்கு பறிபோனது வேலை

ஸ்ரீலங்காவில் கோவிட்19 காரணமாக தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றிய 382,537 தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டதாக தொழில்திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொழில் திணைக்களம் மே மாதம் நடத்திய ஆய்வில், 2,536 தனியார் நிறுவனங்களில் 1,350 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

1,105 தனியார் நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட திறனுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

81 நிறுவனங்கள் மட்டுமே முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், 1,084 முதலீட்டாளர்கள் 153,702 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.