
அமெரிக்காவில் பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த அதிகாரிகள்
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் 2 பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. பொலிசாரை குறிவைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.