இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்ட இவர்கள், இராஜாங்கனை மற்றும் இலங்காபுரவைச் சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,651 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,988ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 652 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 120 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.