ஊரடங்கு தொடர்பில் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பொது விடுமுறைகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கோவிட் -19 நோயாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் தொடர்புகள், பி.சி.ஆர் சோதனைகளுக்கு தொடர்புகளை உட்படுத்துதல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.