பெண் ஊடகவியலாளரின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!

பெண் ஊடகவியலாளரின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது!

பெண் ஊடகவியலாளரான லைரா மெக்கீயின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத சட்டம் 2000 இன் 41 வது பிரிவின் கீழ் குறித்த சந்தேக நபர் இன்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு முன்னர் இதேபோன்று இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி ஏற்பட்ட கலகத்தின்போது பெண் ஊடகவியலாளரான லைரா மெக்கீ சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.