கொவிட் தொற்றால் மேலும் 3 பேர் மரணம்!

கொவிட் தொற்றால் மேலும் 3 பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் (16) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,419 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 619,193 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,134 ஆக அதிகரித்துள்ளது.