பிரபலங்களை அலறவிடும் ஹக்கர்கள்! திடுக்கிடும் பின்னணி

அமெரிக்க பிரபலங்களை அலறவிடும் ஹக்கர்கள்! திடுக்கிடும் பின்னணி

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடிபிடித்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க சைபர் கிரைம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோஷொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் பிரபலங்கள் உட்பட பலரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் புதன்கிழமை ஹக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரபலங்களின் டுவிட்டர் கணக்கை ஹக் செய்த பின்னர் அனைவரின் கணக்குகளில் இருந்தும் ஒரே மாதிரியான டுவீட்களை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் நிறுவனம் குறித்த கணக்குகள் ஹக் செய்யப்பட்டது குறித்து அறிந்திருப்பதாக கூறியுள்ளது.

இதுவேளை இதுகுறித்து விசாரித்து சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலட்சக்கணக்கான பிரபலங்கள் வட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்கள் ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கானவர்களை சென்றடைகிறது.

ஆனால் சில நேரங்களில் இந்த கணக்குகள் சமூக விரோத கும்பல்களால் ஹக் செய்யப்பட்டு அதை தவறாக பயன்படுத்தும் ஆபத்தும் அவ்வப்போது நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.