ஊரடங்கு அறிவிப்பு - மக்களின் அவலநிலை!

ஊரடங்கு அறிவிப்பு - மக்களின் அவலநிலை!

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில்,நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. ஊரடங்கு அறிவிப்பு - மக்களின் அவலநிலை!