ஓய்வு பெற்ற பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்தரசேகரம் காலமானார்!

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்தரசேகரம் காலமானார்!

ஓய்வு பெற்ற பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் சோமசுந்தரம் சந்தரசேகரம் தமது 78ஆவது வயதில் காலமானார்.

அவர், 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பதுளையில் பிறந்தார்.

1950ஆம் ஆண்டு முதல் பதுளை ஊவா கல்லூரியில், தமது ஆரம்ப கல்வியை பயின்ற அவர், பின்னர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் 1961ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமது உயர் கல்வியை தொடர்ந்திருந்தார்.

1963ஆம் ஆண்டு பேராதனை, மற்றும் ஜப்பான் ஹிரோசிமா பல்கலைக்கழகங்களில் தமது பட்டபடிப்பினை பூர்த்தி செய்திருந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர், பேராதனை பல்கலைகழகத்தின் போதனா ஆசிரியர், இலங்கை மத்திய வங்கியின் மொழிப்பெயர்ப்பாளர், ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் கடமையாற்றியுள்ளார்.

இலங்கையில் தமிழர் கல்வி, புதிய நூற்றாண்டுக்கான கல்வி, இலங்கை இந்தியர் வரலாறு போன்றவற்றுடன் மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.