வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை!

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை!

வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம் பொதுமக்களை  அறிவுறுத்தியுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஐந்தாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை அடிப்படையாக கொண்டு தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

இதன்படிஇன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை குறித்த நாட்களில் தபால்மூல வாக்களிப்பில் பங்கேற்கமுடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு  7 லட்சத்து 5 ஆயிரத்து  85 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளவர்களின் வீடுகளுக்கு  உத்தியோகப்பூர்வ வாக்களாளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக  பிரதித் தபால்மா அதிபர்  ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  சுகாதார தரப்பினரின்  ஆலோசனைகளுக்கமைய   குறித்த பகுதிகளில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதன்போதே வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம் பொதுமக்களை  அறிவுறுத்தியுள்ளது.