
தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் - இரா.சம்பந்தன் கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறை தேர்தலானது மிக முக்கியமான தேர்தலாகும். திருகோணமலை மாவட்டத்தில் 90 ஆயிரம் தமிழ் வாக்குகள் இருப்பதாகவும் அதில் 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றால் இரண்டு ஆசனங்களைப் பெறமுடியும்.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் பேசும் மக்களும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்காமல் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்பொழுது உங்களை அழைத்து பேசுவதன் நோக்கம் நீங்கள் உங்களது பகுதிகளில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதை அறிந்துள்ளோம்.
மாற்று கட்சியினர் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கூறுவார்கள்.
ஆனாலும் நீங்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று எதிர்காலம் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்காமல் போனால் எவ்வாறு அமையும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தேர்தலின் போதும் வடக்கு கிழக்கில் 16 ஆசனங்களை பெற்றிருந்தோம். இம்முறை 20 ஆசனங்களை பெறுவதற்கு பொன்னான வாக்குகளை வீட்டுச் சின்னத்திற்கு அளிக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்துக்கு எமது ஒற்றுமையையும், புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் முக்கியத்துவம் எமது வாக்குளே தீர்மானிக்கும் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.