அரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் நடத்துவதில் சிக்கல்

 

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Problem In Salaries To Government Employees

 

இந்தப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கப்பட வேண்டுமாயின் பதில் ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து, அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பளம்

 

அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தவிட்டால் இந்த மாதம் 25ம் திகதி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கான இம்மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Problem In Salaries To Government Employees

அமைச்சரவையின் தீர்மானத்தை நிதிச் சபைக்கு அறிவித்தால் மட்டுமே பணம் அச்சிடப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு படி, மேலதிக நேரக் கொடுப்பனவு தவிர்ந்த சம்பளத்தை மட்டும் வழங்குவதற்கு 29 பில்லியன் ரூபா பணம் தேவைப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட அமைச்சர் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.