இருவர் பலி - 180 பேருக்கு தொற்று

இருவர் பலி - 180 பேருக்கு தொற்று

நாட்டில் மேலும் இரண்டு பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த மரணங்கள் நேற்று பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,583 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் மேலும் 180 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.