இத்தாலியில் அணை இடிந்து 268 பேர் பலியான நாள்: ஜூலை 19- 1985

இத்தாலியில் அணை இடிந்து 268 பேர் பலியான நாள்: ஜூலை 19- 1985

இத்தாலியில் வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஸ்டேவா என்ற கிராமத்திற்கு மேலே 2 அணைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அணையில் மேலணை 1985-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி திடீரென இடிந்தது.

இத்தாலியில் வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஸ்டேவா என்ற கிராமத்திற்கு மேலே 2 அணைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அணையில் மேலணை 1985-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி திடீரென இடிந்தது. அதில் இருந்த தண்ணீர் கடும் சீற்றத்துடன் வெளியேறியதால், கீழணையும் உடைந்தது.

சேறு சகதியுடன் பாய்ந்து சென்ற காட்டாற்று வெள்ளம் ஸ்டேவா கிராமத்தையே மூழ்கடித்தது. 8 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளமானது, அணைக்கட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள அவிசியோ ஆற்றுக்கு செல்லும் வரை, வழியில் உள்ள அனைத்து வளங்களையும் அழித்தது. இந்த பேரழிவில் 268 மக்கள் கொல்லப்பட்டனர்.

 


இத்தாலி வரலாற்றில் நிகழ்ந்த பேரழிவில் இதுவும் ஒன்று.

• 1967 - வட கரோலினாவில் போயிங் மற்றும் செஸ்னா விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் பலியானார்கள்.

• 1996 - அட்லாண்டாவில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கின.

• 1827 - சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் மங்கள் பாண்டே பிறந்தார்

• 1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்