சற்றுமுன்னர் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 2724 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த 9 பேரும் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.