ஈரானில் மீண்டும் வெடி விபத்து: தொடரும் மர்மங்கள்!

ஈரானில் மீண்டும் வெடி விபத்து: தொடரும் மர்மங்கள்!

ஈரானில் இடம்பெறும் மர்ம விபத்துக்களின் வரிசையில் மேலும் ஒரு வெடி விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதன்படி இஸ்பஹன் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று திடீரென மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அணு ஆயுத செறிவூட்டல் மையம், பெட்ரோ கெமிக்கல் மையம், திரவ எரிபொருள் உற்பத்தி மையம், மின் உற்பத்தி மையம், மருத்துவமனை உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

தங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் இவ்வாறு ஈடுபட்டு வருவதாக ஈரான் குற்றச்சாட்டி வருகிறது.

ஈரானில் கடந்த சில நாட்களாக நடைபெறும் மர்ம விபத்துக்கள் வரிசையில் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த மர்ம விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.