
யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளருக்கு நேர்ந்த விபரீதம்!
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக விடுதியில் தங்கியிருந்த விரிவுரையாளர் ஒருவரை காட்டு யானை தாக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் கொழும்பு - களனிய பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான,32 வயதுடைய காயத்திரி டில்ருக்சி என்பவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், விடுதியில் தங்கியிருந்த நிலையில் இருவரும் மற்றொருவரும் அப்பகுதியில் நடமாடியுள்ளனர். இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியுள்ளனர். இதன்போதே ஒருவரை யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பில் கிளிநொச்சி வனவிலங்கு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.