அமெரிக்காவில் ஆர்ப்பரிக்கும் கலகக்காரர்கள்: எரியும் பொலிஸ் நிலையம்!

அமெரிக்காவில் ஆர்ப்பரிக்கும் கலகக்காரர்கள்: எரியும் பொலிஸ் நிலையம்!

அமெரிக்காவில் பொலிஸ் கூட்டமைப்பு கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களை அடக்கி ஆளும் ஆட்சியதிகார நிறவெறிக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தொடர்ந்தும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒரேகான் மாநிலத்தின் போர்ட்லாண்ட் நகரில் பொலிஸ் கூட்டமைப்பு கட்டிடத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.

அண்மையில் பெயர் பட்டி இல்லாது தம்மை பொலிஸ் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் போராட்டக்காரர்களை கைது செய்து துன்புறுத்தியதால் குறித்த சர்ச்சை எழுந்து ஆர்ப்பாட்டங்களும் வலுத்துள்ளன.

இதனால் போர்ட்லாண்ட் மேயர் டெட் வீலர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், இத்தகைய போலிக்காரர்களை உடனடியாக வெளியே அகற்றுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.