யாழில் பரிதாபமாக பலியான குழந்தை!

யாழில் பரிதாபமாக பலியான குழந்தை!

யாழ்ப்பாணம் அனலைதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் மின்சாரம் தாக்கி 11 மாத பெண்குழந்தையொன்று இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தயாளன் விதுசா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சார வயர் வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்தது. தவழ்ந்து சென்ற குழந்தை வயரினை இழுத்துள்ளது. இதன் போது வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

உடனடியாக அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று காட்டிய போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.