
யாழில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா? யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடவில்லை என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுவதாக அரசியல்வாதிகள் போலிப் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் உண்மைத்தன்மையை பொதுமக்களிடம் கேட்டுப் பார்க்குமாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதை குறிப்பிட்டார்.
புங்குடுதீவு பகுதியில், இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இதைப் பார்த்த சில அரசியல்வாதிகள், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர், அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.