அதிகரித்த கட்டணம் அறவிடும் தனியார் ஆசிரியர்கள் -பெற்றோர் குமுறல்..!

அதிகரித்த கட்டணம் அறவிடும் தனியார் ஆசிரியர்கள் -பெற்றோர் குமுறல்..!

தனியார் கல்வி நிலையங்களில் சில ஆசிரியர்கள் மாணவர்களிடம் நியாயமற்ற மாதாந்த கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கு ஒரு மாணவருக்கு 3500 மற்றும் 4000 ரூபா என அதீதமான மாதாந்த கட்டணத்தை பல ஆசிரியர்கள் அறவிடுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்த வகுப்புகளின் மாதாந்தக் கட்டணம் தவிர, சேர்க்கைக் கட்டணமும் தனித்தனியாக வசூலிக்கப்படுவதாகக் கூறுபவர்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த நேரத்தில் ஆசிரியர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தனியார் வகுப்புகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து அரசு சில விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ஆசிரியர்கள் தங்களிடம் அதிக அளவில் பணியாளர்களை பராமரிப்பதால் இவ்வளவு பெரிய தொகையை வசூலிக்க நேரிடுகிறது என கூறப்படுகிறது.

அதிகரித்த கட்டணம் அறவிடும் தனியார் ஆசிரியர்கள் -பெற்றோர் குமுறல் | Private Tutors Charging Increased Fees

இந்நிலைமையால் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு தமது காதணிகளை அடமானம் வைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு வரி செலுத்தத் தவறியவர்களில், நாடு முழுவதிலும் அதிகளவான ஆசிரியர்கள் இருப்பதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.