
வெளிநாட்டு துப்பாக்கியை இரகசியமாக வைத்திருந்தவர் சிக்கினார்...
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குழல் ஒன்றை இரகசியமாக வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சுமார் அறுபது வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புலத்சிங்கள காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எக்கலோயா திவலகட பிரதேசத்தில் வைத்து குறித்த நபரும், துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் போரக்ஸ் துப்பாக்கி மற்றும் போரக்ஸ் குழாய் என்பனவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் எதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார் என்பது இதுவரை தெரியவில்லை எனவும், துப்பாக்கி பாகங்களில் இருந்த இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
புலத்சிங்கள காவல் நிலையப் பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன விதானகேவின் பணிப்புரைக்கமைய உப காவல்துறை பரிசோதகர் ரணவக்க, காவல்துறை சார்ஜன்ட்(9643) அசோக, (60040) அனுருத்திக, காவல்துறை உத்தியோகத்தர் (86849) பிரதீப் (95182) சமிந்த மற்றும் (102356) லக்சான் ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.