காட்டு யானை தாக்கி 21 வயது இளைஞர் மரணம்..!

காட்டு யானை தாக்கி 21 வயது இளைஞர் மரணம்..!

பொலனறுவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

பொலனறுவை மாவட்டம், தமன்கடுவையைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இன்று(20.06.2023) அதிகாலை காட்டு வழியாக வயலுக்குச் சென்ற போதே யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலனறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளை தமன்கடுவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.