கொழும்பில் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் பலி..!

கொழும்பில் பதற்றம்: துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொருவர் பலி..!

கொழும்பில் மற்றுமொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொடை மற்றும் ஹோமாகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களையடுத்து கொட்டாவையிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இன்றைய தினம் (21.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான  கொட்டாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.